sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் 71 ஏரிகள் முழுமையாக நிரம்பின

/

காஞ்சியில் 71 ஏரிகள் முழுமையாக நிரம்பின

காஞ்சியில் 71 ஏரிகள் முழுமையாக நிரம்பின

காஞ்சியில் 71 ஏரிகள் முழுமையாக நிரம்பின


ADDED : டிச 12, 2024 10:35 PM

Google News

ADDED : டிச 12, 2024 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதிக்குள் கனமழை காரணமாக நிரம்பிவிடும். ஆனால், நடப்பாண்டில் அக்டோபர் மற்றும் நவம்பரில் போதிய மழை இல்லாததால், ஏரிகள் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டது.

சில நாட்கள் முன்பாக பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக, 20 க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. ஆனால், 100 க்கும் மேற்பட்ட ஏரிகளின் நீர் மட்டம், 25 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளன.

ஏரிகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு பிடியில் இருப்பதால், பல ஏரிகள் நிரம்புவதில் சிக்கல் நீடிக்கிறது.

குன்றத்துார் அருகே உள்ள அணைக்கட்டு தாங்கல் எனும் ஏரி முழுதும் வீட்டுமனைகளாக மாறிவிட்டதால், 133 ஏக்கரும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் இந்த ஏரி என்றைக்குமே நிரம்புவதில்லை.

மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும், மணிமங்கலம் ஏரி, தாமல், தென்னேரி, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், உத்திரமேரூர் ஆகிய ஏரிகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன.

நீர்வள ஆதாரத்துறையினர் நேற்று எடுத்த கணக்கெடுப்பின்படி, 71 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மீதமுள்ள ஏரிகளில், 81 ஏரிகள் 75 சதவீதமும், 118 ஏரிகள் 50 சதவீதமும், 110 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன.






      Dinamalar
      Follow us