sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 புத்தக விழாவில் 8 லட்சம் பேர் பங்கேற்பு: ரூ.60 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை

/

 புத்தக விழாவில் 8 லட்சம் பேர் பங்கேற்பு: ரூ.60 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை

 புத்தக விழாவில் 8 லட்சம் பேர் பங்கேற்பு: ரூ.60 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை

 புத்தக விழாவில் 8 லட்சம் பேர் பங்கேற்பு: ரூ.60 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை


ADDED : டிச 30, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த 11 நாட்களாக நடந்த புத்தக திருவிழாவில், 8 லட்சம் பேர் பங்கேற்றதாகவும், 60 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை நடந்ததாகவும், மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பயன்பெறு ம் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து, ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடத்துகின்றனர்.

அந்த வகையில், 4வது புத்தக திருவிழா, கலெக்டர் வளாகத்தில் உள்ள மைதானத்தில், கடந்த டிச.,19ல் துவங்கியது.

இப்புத்தக திருவிழா நேற்று வரை 11 நாட்கள் தொடர்ந்து நடந்தது. புத்தக திருவிழா அன்றாடம் காலை 10:00 மணிக்கு தொடங்கி, இரவு 9:00 மணி வரை நடைபெற் றது.

இதில் தென்னிந்தியா முழுதும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ளும் வகையில், பல்வேறு அரங்குகளில், 1,000க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள், அமைக்கப்பட்டு, லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

கலை நிகழ்ச்சிகள், மகளிர் குழுவினர் உற்பத்தி பொருட்கள் விற்பனை, அறிவியல் இயக்க செயல்பாடு, ஹிந்து சமய அறநிலையத் துறை போன்றவைக்கு தனி அரங்குகள் அமைக்கப்பட்டு வாசகர்களுக்கு காட்சிபடுத்தியிருந்தன.

எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் என, பலரும் பங்கேற்று பேசினர்.

பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் 1,500 பேர், அன்றாடம் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

அன் றாடம் ஆயிரக்கணக்கான வாசகர்கள், பள்ளி மாணவ - மாணவியர், இளைஞர்கள், முதி யோர், நடுத்தர வயதினயர் என பல தரப்பினரும் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

புத்தக திருவிழாவில், 8 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர் எனவும், 60 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை நடந்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புத்தக திருவிழா நிறைவு நாளான நேற்று, அரசு அலுவலர்கள், துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று வழங்கி னார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், காஞ்சிபுரம் சப் - கலெக்டர் ஆஷிக் அலி, ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் பாலாஜி, முதன்மை கல்வி அலுவலர் நளினி, உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us