sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குன்றத்துார் பகுதியில் 25 சவரன் திருடிய கொத்தனாருக்கு 'காப்பு'

/

குன்றத்துார் பகுதியில் 25 சவரன் திருடிய கொத்தனாருக்கு 'காப்பு'

குன்றத்துார் பகுதியில் 25 சவரன் திருடிய கொத்தனாருக்கு 'காப்பு'

குன்றத்துார் பகுதியில் 25 சவரன் திருடிய கொத்தனாருக்கு 'காப்பு'


ADDED : நவ 14, 2024 09:14 PM

Google News

ADDED : நவ 14, 2024 09:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாங்காடு:குன்றத்துார், மாங்காடு காவல் நிலைய எல்லையில் சமீப காலமாக, வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை இரவு, குன்றத்துாரை அடுத்த தரப்பாக்கம், கோல்டன் பேரடைஸ், கிருஷ்ணா கார்டன் பகுதியில், அடுத்தடுத்து நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து, 1.50 லட்சம் பணத்தை, மர்ம நபர் திருடிச் சென்றார்.

போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இரும்பு ராடுடன் வரும் மர்ம நபர், முகத்தில் டவலை கட்டிக்கொண்டு, வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பணத்தை திருடிச் சென்றது தெரிந்தது.

விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு, 33, என தெரிந்தது. கொத்தனாரான அன்பு, தான் பணியாற்றும் இடத்தின் அருகே பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் பூட்டை உடைத்து பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து உள்ளார்.

அந்த வகையில், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் 1.50 லட்சம் ரூபாய் பணம், 25 சவரன் நகைகளை கொள்ளையடித்தது தெரிந்தது. 25 சவரன் நகைகளை பறிமுதல் செய்த மாங்காடு போலீசார், அன்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us