sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெம்மேலியில் காட்சிக்கு வைத்துள்ள பிரமாண்ட குழாய்

/

நெம்மேலியில் காட்சிக்கு வைத்துள்ள பிரமாண்ட குழாய்

நெம்மேலியில் காட்சிக்கு வைத்துள்ள பிரமாண்ட குழாய்

நெம்மேலியில் காட்சிக்கு வைத்துள்ள பிரமாண்ட குழாய்


ADDED : மார் 01, 2024 12:35 AM

Google News

ADDED : மார் 01, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:சென்னை அடுத்த நெம்மேலியில், பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின்கீழ், தினசரி கடல்நீரிலிருந்து, 15 கோடி குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலை, 1,516.82 கோடி ரூபாய் மதிப்பில், தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்., 24ம் தேதி முதல்வர் ஸ்டாலின், அதை இயக்கி குடிநீர் உற்பத்தியை துவக்கி வைத்தார். இந்த ஆலையில், நாட்டிலேயே அதிகபட்ச விட்டம் கொண்ட கடல்நீரை உள்வாங்கும் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மாதிரி, ஆலை வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பெருநகர் குடிநீர் வாரிய பொறியாளர் ஒருவர் கூறியதாவது:

இந்திய கடற்பகுதியில், அதிகபட்ச விட்ட அளவு கொண்ட குழாயை, இங்கு தான் அமைத்துள்ளோம். ஆசியாவிலேயே அதிகபட்ச விட்டம் கொண்ட குழாயாகவும் இருக்கலாம்.

கடற்கரையிலிருந்து, 1,035 மீட்டர் நீளத்திற்கு, கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் ஆழத்தில், இக்குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

கடல்நீரை உந்தி அனுப்பும் மோட்டார் அமைப்பும் கிடையாது. நீரின் அழுத்தத்தில், தாமாக உந்தும் வகையில் இக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us