sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நடைபயிற்சியில் பங்கேற்றோருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை

/

நடைபயிற்சியில் பங்கேற்றோருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை

நடைபயிற்சியில் பங்கேற்றோருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை

நடைபயிற்சியில் பங்கேற்றோருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை


ADDED : நவ 04, 2024 03:35 AM

Google News

ADDED : நவ 04, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கடந்த நவம்பர் மாதம் முதல், மாதத்தின் முதல் ஞாயிறன்று ‛நடப்போம் நலம்பெறுவோம்' என்ற 8 கி.மீ., துார நடைபயிற்சி இயக்கத்தை, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று நடத்தி வருகிறது.

அதன்படி, நவ., மாதத்திற்கான 'நடப்போம்; நலம் பெறுவோம்' இயக்கம், நேற்று காலை இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் தலைமையில் நடந்தது.

இதில், மாவட்ட மலேரியா அலுவலர் மணிவர்மா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை அலுவலர்கள், நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என, 78 பேர் பங்கேற்றனர்.

நடைபயிற்சியில் பங்கேற்றோருக்கு தொற்றாநோய் தடுப்பு மருத்துவ அலுவலர், மாவட்ட மலேரியா அலுவலர் மணிவர்மா மற்றும் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் திருப்புட்குழி வட்டார சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையிலான மருத்துவ குழுவினர், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழிகாட்டுதலின்படி, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் டி.ஆர்.செந்தில், காஞ்சிபுரம் மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் அருள்நம்பி ஆகியோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us