/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வெளியேற வழியில்லாத அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை
/
மழைநீர் வெளியேற வழியில்லாத அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை
மழைநீர் வெளியேற வழியில்லாத அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை
மழைநீர் வெளியேற வழியில்லாத அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை
ADDED : செப் 22, 2024 03:44 AM

திருவள்ளூர் : சென்னை --- பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுஞ்சாலை இணைப்பு சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், மழைநீர் செல்லும் வழி மண்ணால் அடைக்கப்பட்டதால், வெளியேற வழியில்லை.
இதனால், பூந்தமல்லி முதல், ஸ்ரீபெரும்புதுார் வரை உள்ள அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் சிறு மழைக்கே ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம் போல மாறியுள்ளது.
இணைப்புச் சாலை பணிகளும் பல பகுதிகளில் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், சேதமடைந்த சாலை சிறு மழைக்கே குளம்போல் மாறியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு பெய்த சிறு மழைக்கே அதிவிரைவு நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல தேங்கியிருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.