/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் கால்வாயா... வயல்வெளியா?
/
மழைநீர் கால்வாயா... வயல்வெளியா?
ADDED : செப் 21, 2024 01:25 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில் உள்ள காந்தி தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காதததால், கால்வாயில் மண் திட்டுகளாலும், செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதாலும் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழைகாலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் சாலையில் தேங்கும் நிலை உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் களக்காட்டூரில் உள்ள மழைநீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.