ADDED : அக் 17, 2024 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர்கள் சார்பில், உலக மக்கள் நன்மை கருதி மஹா சுவாமிகள் பிருந்தாவனத்தின் முன், லலிதா சகஸ் நாம பாராயணம், சவுந்தர்யலஹரி பாராயணம் நடைபெற்றது.
இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பாராயணம் செய்தனர். பாராயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் புடவை, மஞ்சள் குங்குமம் காமாட்சி அம்மன் படம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலிலும் இக்குழுவினர் பாராயணம் செய்தனர்.