நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 28; சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம், பெரும்பாக்கத்தில் உள்ள உறவினர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, நள்ளிரவு வீடு நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
ஓ.எம்.ஆர்., கந்தன்சாவடி அருகில் சென்ற போது, மெட்ரோ பணிக்காக நிறுத்தியிருந்த லாரியின் பின்பகுதியில் மோதினார்.
இதில், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.