/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்
/
மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்
ADDED : ஜூலை 26, 2025 02:28 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கணேசா நகர் தும்பவனம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவங்கியது.
காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி அருகில் உள்ள கணேசா நகர் தும்பவனம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு வரசக்தி விநாயகர் மற்றும் தும்பவனம் மாரியம்மனுக்கு அபிஷேகத்துடன் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தது.
நேற்று மாலை 3:00 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. இன்று மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 4:30 மணிக்கு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டியும், மாலை 6:00 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு கும்பம் படையலிடப்படுகிறது.
விழா நிறைவாக வரும் 28 ம் தேதி காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், தொடர்ந்து வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு மஞ்சள் நீராட்டும், மதியம் 1:00 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.