sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்

/

மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்

மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்

மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்


ADDED : ஜூலை 26, 2025 02:28 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கணேசா நகர் தும்பவனம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவங்கியது.

காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி அருகில் உள்ள கணேசா நகர் தும்பவனம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு வரசக்தி விநாயகர் மற்றும் தும்பவனம் மாரியம்மனுக்கு அபிஷேகத்துடன் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தது.

நேற்று மாலை 3:00 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. இன்று மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 4:30 மணிக்கு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டியும், மாலை 6:00 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு கும்பம் படையலிடப்படுகிறது.

விழா நிறைவாக வரும் 28 ம் தேதி காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், தொடர்ந்து வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு மஞ்சள் நீராட்டும், மதியம் 1:00 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us