/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூலஸ்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை
/
மூலஸ்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை
ADDED : ஆக 04, 2025 11:36 PM

காஞ்சிபுரம்,
முத்தியால்பேட்டை கீழத் தெரு, மூலஸ்தம்மன் கோவிலில், 25வது ஆண்டு ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. இதில், வீணை வாசிக்கும் அலங்காரத்தில் மூலஸ்தம்மன் எழுந்தருளினார்.
இந்த விழாவை முன்னிட்டு, ஆக., 1ம் தேதி காலை 10:00 மணிக்கு குளக்கரையில் ஜலம் திரட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின், மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலகு குத்திய பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் 1:00 மணிக்கு, முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் குடும்பத்தினர் கூழ் வார்த்தனர்.
பின், இரவு 10:00 மணிக்கு, வீணை வாசிக்கும் அலங்காரத்தில் மூலஸ்தம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.