sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையில் சிதறிய ஜல்லி கற்களால் விபத்து

/

சாலையில் சிதறிய ஜல்லி கற்களால் விபத்து

சாலையில் சிதறிய ஜல்லி கற்களால் விபத்து

சாலையில் சிதறிய ஜல்லி கற்களால் விபத்து


ADDED : பிப் 21, 2025 12:56 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத்- ஒரகடம் நெடுஞ்சாலையில், தேவேரியம்பாக்கம் கூட்டுச்சாலை பகுதி உள்ளது.

லிங்காபுரம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் லாரிகள், தேவேரியம்பாக்கம் கூட்டுச்சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.

சில லாரிகளில், தார்ப்பாய் போர்த்தாமல் ஓவர் லோடு ஏற்றி செல்வதால், ஜல்லி கற்கள் கீழே கொட்டி சாலையில் சிதறி கிடக்கின்றன.

அவ்வாறு தேவேரியம்பாக்கம் கூட்டுச்சாலையின் மையப் பகுதி சாலையில், அதிக அளவிலான ஜல்லி கற்கள் சிதறி காணப்படுகின்றன.

இதனால், இச்சாலை வழியாக வாலாஜாபாத், காஞ்சிபுரம் மற்றும் ஒரகடம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் லிங்காபுரம் வழியாக பல கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர்.

எனவே, தேவேரியம்பாக்கம் கூட்டுச்சாலையின் மையப்பகுதியில் குவிந்துள்ள ஜல்லி கற்களை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us