sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பணி முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத வேளாண் விரிவாக்க மைய கட்டடம்

/

பணி முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத வேளாண் விரிவாக்க மைய கட்டடம்

பணி முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத வேளாண் விரிவாக்க மைய கட்டடம்

பணி முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத வேளாண் விரிவாக்க மைய கட்டடம்


ADDED : பிப் 12, 2024 06:06 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தைச் சுற்றி புல்லம்பாக்கம், வயலக்காவூர், மதூர், சித்தாலப்பாக்கம், அருங்குன்றம், பழவேரி, பினாயூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.

இந்த கிராம விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் சாகுபடி செய்வதற்காக நெல் விதைகள் மற்றும் உரங்களை திருமுக்கூடலில் உள்ள துணை வேளாண் விரிவாக்க மையத்தில் பெறுகின்றனர்.

திருமுக்கூடல் துணை வேளாண் விரிவாக்கம் மையத்திற்கான கட்டடம் கடந்த பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இதனால், போதுமான இட வசதி இல்லாமல், விவசாயத்திற்கான விதைகள் மற்றும் உர மருந்துகள் வைத்து பராமரிக்காத இயலாத நிலை இருந்து வருகிறது. இதனால், திருமுக்கூடலில் உள்ள துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த சுற்று வட்டார கிராம விவசாயிகள் கோரி வந்தனர்.

அதன்படி திருமுக்கூடல் துணை வேளாண் விரிவாக்கம் மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேளாண் துறை சார்பில் 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பணி துவங்கியது.

தற்போது பணி முழுமையாக நிறைவு பெற்றும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. தற்போது சாகுபடி பணிகள் நடைபெறுவதால், புதிய வேளாண் விரிவாக்கம் மைய கட்டடத்தை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர திருமுக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து உத்திரமேரூர் ஒன்றிய உதவி வேளாண் இயக்குனர் முகுந்தன் கூறியதாவது:

திருமுக்கூடலில் துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கான கட்டடப் பணக நிறைவு பெற்றுள்ளது. எனினும் அறையின் உள்ளே சிமென்ட் தரை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளாமல் உள்ளது.

அப்பணி மேற்கொண்டு குத்தகைதாரர் வேளாண் துறை வசம் ஒப்படைத்ததும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us