sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

படப்பையில் மேம்பால பணி மந்தம் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

/

படப்பையில் மேம்பால பணி மந்தம் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

படப்பையில் மேம்பால பணி மந்தம் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

படப்பையில் மேம்பால பணி மந்தம் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு


ADDED : ஜன 07, 2025 11:55 PM

Google News

ADDED : ஜன 07, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை:வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, 2022 ஜனவரியில் துவங்கி, தற்போது வரை மந்தகதியில் நடக்கிறது.

பாலம் கட்டுமான பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால், சாலை குறுகலாகி உள்ளது. இதனால், வழக்கத்தை விட இரு மடங்கு போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

மூன்று ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், படப்பையில் ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட இடங்களில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் படப்பையில் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us