ADDED : ஜன 10, 2025 02:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துார் ஒன்றியத்தில் படுமோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். படப்பையில் ஆமை வேகத்தில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், படப்பையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசுகையில்,''தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை நடக்கிறது. அண்ணா பல்கலை பெண் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், 'அந்த சார்' யார் என்பதை கண்டுபிடிக்காமல் விடமாட்டோம்,'' என்றார்.