sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாதாள சாக்கடை பிரச்னை தீரவில்லை அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் தர்ணா

/

பாதாள சாக்கடை பிரச்னை தீரவில்லை அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் தர்ணா

பாதாள சாக்கடை பிரச்னை தீரவில்லை அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் தர்ணா

பாதாள சாக்கடை பிரச்னை தீரவில்லை அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் தர்ணா


ADDED : ஆக 25, 2025 11:33 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில், பாதாள சாக்கடை பிரச்னை தீரவில்லை என அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு கூறி, மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நேற்று நடத்தினார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி யில் பாதாள சாக்கடை பிரச்னை தொடர்ந்து நீடிக்கிறது. இதில், 23வது வார்டில் மாநகராட்சியிலேயே அதிக பிரச்னை நீடிப்பதால், இந்த வார்டில் வசிப்போர் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

வார்டு கவுன்சிலர் புனிதா பல கட்ட போராட்டங்களை நடத்தினார். மாநகராட்சி கூட்டத்திலும் பாதாள சாக்கடை பிரச்னையை தொடர்ந்து பேசியுள்ளார்.

இருப்பினும், வார்டில் உள்ள வீடுகளில் கழிவுநீர் வீடுகளுக்குள் திரும்பி வருவது போன்ற பிரச்னைகள் நீடிக்கின்றன. இதனால், அ.தி.மு.க., கவுன்சிலரான புனிதா, கணவர் சம்பத் துடன் சேர்ந்து, மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை நேற்று நடத்தினார்.

காலை 10:00 மணிக்கு துவங்கிய போராட்டம், மாலை 5:00 மணி வரை நீடித்தது. இடையே, மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம், புனிதா, சம்பத்திடம் பேச்சு நடத்தினார். நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

இருப்பினும், மாலை வரை மாநகராட்சி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.






      Dinamalar
      Follow us