sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஊராட்சி அலுவலகத்தில் இயங்கும் அங்கன்வாடி

/

ஊராட்சி அலுவலகத்தில் இயங்கும் அங்கன்வாடி

ஊராட்சி அலுவலகத்தில் இயங்கும் அங்கன்வாடி

ஊராட்சி அலுவலகத்தில் இயங்கும் அங்கன்வாடி


ADDED : ஜூலை 16, 2025 10:06 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:தம்மனுாரில், ஊராட்சி அலுவலக கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வாலாஜாபாத் அடுத்துள்ளது தம்மனுார் கிராமம். இக்கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 30 குழந்தைகள் பயில்கின்றனர். இந்த அங்கன்வாடி மையத்திற்கென பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடம் சிதிலம் அடைந்தது.

கடந்த 2021ல், மழைக்காலத்தின் போது அக்கட்டடம் இடிந்து விழக்கூடும் என அப்பகுதியினர் அச்சம் அடைந்தனர். இதனால், அக்கட்டடம் அப்பகுதி மக்கள் மூலம் அப்போது இடித்து அகற்றப்பட்டது.

அதை தொடர்ந்து, தம்மனுார் ஊராட்சி அலுவலகத்திற்கான கட்டடத்தின் ஒரு அறையில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.

அப்பகுதி மக்கள் பலரும் பல்வேறு பணிகள் சார்ந்து தம்மனுார் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால், அங்கு ஆரம்ப கல்வி கற்பதற்கான சூழல் மற்றும் ஆரோக்கியம் ஏற்படுத்துவதற்கான வழிவகை குழந்தைகளுக்கு இல்லை என, பெற்றோர் புலம்புகின்றனர்.

எனவே, தம்மனுாரில் அங்கன்வாடி மையத்திற்கென புதியதாக கட்டட வசதி ஏற்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us