/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : செப் 24, 2025 10:21 PM
காஞ்சிபுரம்:நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சி புரம் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்ட செய்தி அறிக்கை:
காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில், நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அக்., 10ம் தேதி துவங்கும் பயிற்சிக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வி ண்ணப் பதாரர் பத்தா ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பின்றி அனைத்து தரப்பினர் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும், இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பத்தை, 100 ரூபாய் கட்டணம், 18 ரூபாய் சேவை வரி என, 118 ரூபாய் செலுத்தி பெற்று கொள்ளலாம்.
பயிற்சி கட்டணமாக, 3,856 ரூபாய், சேவை கட்டணமாக 694 ரூபாய் என, 4,550 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில், 500 ரூபாய் மதிப்பிலான, நகைகளின் தரம் அறிய உதவும் உபகரணங்கள் வழங்கப்படும்.
நகை கடன், வட்டி கணக்கீடு செய்தல், ஹால் மார்க், நகை அடகு சட்டம், தரம், விலை மதிப்பீடு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.
பயிற்சி முடிந்த பின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையம் என்கிற முகவரி, 044- - 2723 7699 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.