sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

/

 சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

 சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

 சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்


ADDED : டிச 06, 2025 05:34 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான, தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்காளர் தீவிர திருத்த பணிகள் நடக்கின்றன. மேலும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான முதற்கட்ட பரிசோதனை அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுதும் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது, ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு, சென்னையின் 12வது மண்டல அலுவலரும், ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதிக்கு ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியரும், உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலரும், காஞ்சிபுரம் சட்டசபை தொகுதிக்கு காஞ்சிபுரம் சப் - கலெக்டரும் என, பெயர் குறிப்பிடாமல் பதவி குறிப்பிட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us