sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாலாலயம் செய்து ஓராண்டாகியும் பணி துவங்காத அருளாலீஸ்வரர் கோவில்

/

பாலாலயம் செய்து ஓராண்டாகியும் பணி துவங்காத அருளாலீஸ்வரர் கோவில்

பாலாலயம் செய்து ஓராண்டாகியும் பணி துவங்காத அருளாலீஸ்வரர் கோவில்

பாலாலயம் செய்து ஓராண்டாகியும் பணி துவங்காத அருளாலீஸ்வரர் கோவில்


ADDED : மே 10, 2025 01:35 AM

Google News

ADDED : மே 10, 2025 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழிசூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், அகிலாண்டேஸ்வரி உடனுறை அருளாலீஸ்வரர் கோவில் உள்ளது.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமை வாய்ந்த கோவில், முறையான பராமரிப்பின்மையால், கருவறை உள்ளிட்ட கட்டட பகுதிகள் பழுதடைந்து நாளுக்கு நாள் பலவீனமாகி வந்தது.

எனவே, இக்கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொண்டு வழிபாட்டிற்கு விடக்கோரி பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளனர்.

இதனிடையே, 2023, டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையின் போது, கோவில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

தொடர்ந்து, அக்கோவிலை புனரமைக்க அறநிலையத்துறை அனுமதியின் பேரில், சில தொண்டு நிறுவனங்கள் முன்வந்தன.

அதன்படி, 2023, டிசம்பர்7ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் பாலாலயம் செய்யப்பட்டு, மூலவர் கருவறை உள்ளிட்ட கோவிலின் அனைத்து சன்னிதிகளும் மூடப்பட்டன.

அதை தொடர்ந்து அடுத்தகட்ட பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால், கோவிலில் வழிபாடு மேற்கொள்ள இயலாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

எனவே, அழிசூர் அருளாலீஸ்வரர் கோவில் திருப்பணி விரைவாக துவங்க துறை ரீதியான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us