sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கலெக்டர் வளாகத்திலேயே முடிக்கப்படும் விழிப்புணர்வு பணி

/

கலெக்டர் வளாகத்திலேயே முடிக்கப்படும் விழிப்புணர்வு பணி

கலெக்டர் வளாகத்திலேயே முடிக்கப்படும் விழிப்புணர்வு பணி

கலெக்டர் வளாகத்திலேயே முடிக்கப்படும் விழிப்புணர்வு பணி


ADDED : மார் 17, 2024 02:09 AM

Google News

ADDED : மார் 17, 2024 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அனைவரும் ஓட்டளிக்கும் வகையில், தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் வளாக மைதானத்தில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.

மேலும், கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம், ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மகளிர் சுயஉதவிக் குழுவினர் கோலமிட்டனர். விடுமுறை நாளான சனிக்கிழமையான நேற்று, கலெக்டர் வளாகத்தில், பொதுமக்கள் யாரும் பார்க்க முடியாத வகையில், விழிப்புணர்வு கோலமிடும் பணி நடந்தது.

வாக்காளர்கள் பலரும் பார்க்கும் வகையில், விழிப்புணர்வு நடத்தாமல், கலெக்டர் வளாகத்திலேயே இதுபோன்ற விழிப்புணர்வு பணிகள் நடத்தப்படுவது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.

கடந்த 2021ல், சட்டசபை தேர்தல் சமயத்திலும், தேர்தல் விழிப்புணர்வு கலெக்டர் வளாகத்திலேயே நடத்தி யது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us