ADDED : டிச 14, 2024 01:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காட்டாங்குளம் கிராமம்.
இக்கிராமத்தில், புதியதாக வினாயகர் கோவில் கட்டி வழிபட அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து தீர்மானித்தனர்.
அதன்படி, அப்பகுதி சாலை ஓரத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில், கற்பக வினாயகர் கோவில் கட்ட நேற்று பூமிபூஜை விழா நடந்தது.
வினாயகருக்கு சிறப்பு அர்ச்சனை வழிபாடு நடந்தது. அதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள், கோவில் கட்டுமானப் பகுதியில் பூக்கள் துாவி வழிப்பட்டனர்.

