/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி
/
வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி
ADDED : மார் 23, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை:படப்பை அருகே உள்ள மகாண்யம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 53. அதே
பகுதியில் உள்ள நர்சரி கார்டனில், செடி பராமரிக்கும் பணி செய்து வந்தார்.
ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து மகாண்யத்திற்கு, ஸ்பிளண்டர் பைக்கில், அன்பழகன் சென்றார்.
ஸ்ரீபெரும்புதுார் - மணிமங்கலம் நெடுஞ்சாலையில், மலைப்பட்டு பகுதியை கடந்தபோது, அந்த வழியே சென்ற மினி வேன், பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்பழகன், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.