/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அறங்காவலர் குழுவினர் பொறுப்பேற்பு
/
அறங்காவலர் குழுவினர் பொறுப்பேற்பு
ADDED : ஜன 25, 2025 03:05 AM
காஞ்சிபுரம்காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழுவின் தலைவராக, வாலாஜாபாதைச் சேர்ந்த கே.தியாகராஜன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் செயல்பட்டு வந்தனர். இக்குழுவினரின் பதவிக்காலம் கடந்தாண்டு ஆக., 17ம் தேதி நிறைவு பெற்றது.
அறநிலையத்துறை சார்பில், மாவட்ட அறங்காவலர் குழுவிற்கான தேர்வு மீண்டும் நடந்தது. இதில், தியாகராஜன் தலைமையிலான செல்வி ஆறுமுகம், கோதண்டராமன், சத்தியமூர்த்தி, வெங்க சேடன் குழுவினரே மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு, ஹிந்து அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் கார்த்திகேயன் நேற்று பதவியேற்பு செய்து வைத்தார். வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.