sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புத்தக திருவிழா காஞ்சியில் 3வது புத்தக திருவிழா துவக்கம் கலைநிகழ்ச்சி, சொற்பொழிவுக்கு ஏற்பாடு

/

புத்தக திருவிழா காஞ்சியில் 3வது புத்தக திருவிழா துவக்கம் கலைநிகழ்ச்சி, சொற்பொழிவுக்கு ஏற்பாடு

புத்தக திருவிழா காஞ்சியில் 3வது புத்தக திருவிழா துவக்கம் கலைநிகழ்ச்சி, சொற்பொழிவுக்கு ஏற்பாடு

புத்தக திருவிழா காஞ்சியில் 3வது புத்தக திருவிழா துவக்கம் கலைநிகழ்ச்சி, சொற்பொழிவுக்கு ஏற்பாடு


ADDED : பிப் 01, 2025 12:29 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து, ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடத்தி வருகிறது.

அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான புத்தக திருவிழா, கலெக்டர் வளாகத்தில் நேற்று துவங்கி, வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. புத்தக திருவிழா தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும்.

இதில், தென்னிந்தியா முழுதும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்கும் வகையில், பல்வேறு அரங்குகளில், 1,000க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் அமைக்கப்பட்டு, லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இப்புத்தக கண்காட்சி அறிவு பசிக்கு விருந்தாக இருக்கும். மேலும், பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

புத்தக திருவிழாவை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி, நேற்று மாலை 5:00 மணிக்கு துவக்கி வைத்தார். புத்தக அரங்குகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின், அமைச்சர் காந்தி கூறுகையில், “ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், நுாலகம் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புத்தகம் படித்தால் மட்டுமே அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்,” என்றார்.

இதில், கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன் ஆகியோர் புத்தகத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினர். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர்கள், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஏழு பயனாளிகளுக்கு 7.21 லட்சம் ரூபாய் மதிப்பிலான சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரை, அமைச்சர் காந்தி வழங்கினார். பின், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

அடுத்து வரும் நாட்களிலும், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் சொற்பொழிவு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'தினமலர்' நாளிதழ் சார்பில், ஸ்டால் எண்: 45ல், புத்தக விற்பனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

புத்தக திருவிழா நடக்கும் கலெக்டர் வளாக மைதானத்தில், உணவு பாதுகாப்பு துறை, வேளாண் துறை, வேலைவாய்ப்பு துறை, கல்வித்துறை சார்பில், அரசு திட்ட செயல்பாடுகள் பற்றி விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் இணை செயலர் லோகநாதன், சப் - கலெக்டர் ஆஷிக் அலி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்யா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அணுராதா, முதன்மை கல்வி அதிகாரி வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us