sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஐஸ்ஹவுசில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை

/

ஐஸ்ஹவுசில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை

ஐஸ்ஹவுசில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை

ஐஸ்ஹவுசில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை


ADDED : ஜன 30, 2025 11:53 PM

Google News

ADDED : ஜன 30, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை, திருவல்லிக்கேணி, கஜபதி தெருவைச் சேர்ந்தவர் தனுஷ், 24; குத்துச்சண்டை வீரர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நண்பர் அருண்குமார், 25, என்பவருடன், கிருஷ்ணாம்பேட்டை மயானபூமி அருகே நடந்து சென்றார். அப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த ஒன்பது பேர் உடைய மர்ம கும்பல், அவர்களை சுற்றி வளைத்தது.

மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்திகளை எடுத்த அந்த கும்பல், தனுஷை தாக்க முயன்றது. அவர்களை முதலில் தடுத்த குத்துச்சண்டை வீரர் தனுஷ், ஒருகட்டத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல், அங்கிருந்து ஓடினார்.

எனினும் அந்த கும்பல், அவரை விடாமல் ஓட ஓட விரட்டி, சரமாரியாக வெட்டியது. கை, காலில் பலமாக வெட்டிய கும்பல், ஆத்திரம் தீராமல், தனுஷின் தலையை இரண்டாக பிளந்து, கொடூரமாக கொலை செய்தது. இதை தடுக்க முயன்ற தனுஷின் நண்பர் அருண்குமாருக்கு தலையில் வெட்டு விழுந்தது.

சம்பவம் குறித்து அறிந்த ஐஸ்ஹவுஸ் போலீசார், தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்த அருண்குமாரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

வழக்கு பதிந்த போலீசார், காயமடைந்த அருண்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், திருவல்லிக்கேணி, கஜபதி தெருவைச் சேர்ந்த மோகன், 27, மற்றும் அவரது நண்பர்கள், தனுஷை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மோகனின் மொபைல் போன் எண்ணை ஆய்வு செய்தபோது, ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த மோகன், செந்தில்குமார், 42, விஷால், 19, சுரேஷ்குமார், 20, ஆகிய நால்வரையும் கைது செய்தனர். இக்கொலையில் தொடர்புடைய மேலும் ஐந்து பேரையும் பிடித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திலேயே, கொலையாளிகளை ஐஸ்ஹவுஸ் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மோகன் பழைய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

எதற்காக நடந்தது கொலை?

தனுஷ் கொலை குறித்து, அருண்குமாரிடம் நடத்திய விசாரணைக்கு பின், போலீசார் கூறியதாவது:கடந்த ஆண்டு மார்ச், 3ம் தேதி, கிருஷ்ணாம்பேட்டை மயானபூமி எதிரே, அய்யப்பன் என்பவரது இறுதிச்சடங்கில், கானா பாடல் பாடிய மோகனை, தனுஷ், அவரது தந்தையுடன் சேர்ந்து அடித்துள்ளார். இது தொடர்பாக மோகன், வழக்கு நடத்தி வருகிறார். இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன், மோகனை அழைத்து பேசிய தனுஷ், வழக்கை வாபஸ் பெறச்சொல்லி மிரட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மோகன், அவரது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு, தனுஷை தீர்த்துக்கட்டியுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us