sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'ஹீட்டர்' பயன்படுத்தி வெந்நீர் வைத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

/

'ஹீட்டர்' பயன்படுத்தி வெந்நீர் வைத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

'ஹீட்டர்' பயன்படுத்தி வெந்நீர் வைத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

'ஹீட்டர்' பயன்படுத்தி வெந்நீர் வைத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு


ADDED : மார் 28, 2025 08:41 PM

Google News

ADDED : மார் 28, 2025 08:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துார் அடுத்த மணிமங்கலம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் தமிழரசு, 12. இவர், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை, 10ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு பொதுத்தேர்வு நடந்ததால், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மதியத்திற்கு பின் வகுப்புகள் நடந்தன.

தமிழரசு நேற்று மதியம் பள்ளிக்கு செல்ல, வீட்டில் இரும்பு பக்கெட்டில், 'வாட்டர் ஹீட்டர்' வாயிலாக தண்ணீரை சுடுபடுத்தி உள்ளார்.

தண்ணீர் சுடாகி விட்டதா என தொட்டுப்பார்த்தபோது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். இதில் மயக்கமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, முடிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து, மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us