/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரதான குழாயில் உடைப்பு பஞ்சுபேட்டையில் குடிநீர் வீண்
/
பிரதான குழாயில் உடைப்பு பஞ்சுபேட்டையில் குடிநீர் வீண்
பிரதான குழாயில் உடைப்பு பஞ்சுபேட்டையில் குடிநீர் வீண்
பிரதான குழாயில் உடைப்பு பஞ்சுபேட்டையில் குடிநீர் வீண்
ADDED : மே 30, 2025 01:06 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி, பஞ்சுபேட்டை பகுதியில் உள்ள வீடுகளுக்கு நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பஞ்சுபேட்டை செவ்வந்தீஸ்வரர் கோவில் நுழைவாயில் அருகில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. நாளடைவில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையும் சேதமடையும் சூழல் உள்ளது.
எனவே, பஞ்சுபேட்டையில், குடிநீர் குழாயை சீரமைக்க கருப்படிதட்டடை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.