/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சி அலுவலகத்திற்கு ரூ.30 லட்சத்தில் கட்டடம்
/
ஊராட்சி அலுவலகத்திற்கு ரூ.30 லட்சத்தில் கட்டடம்
ADDED : டிச 07, 2024 07:43 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது பழையசீவரம் ஊராட்சி. இப்பகுதியில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் இயங்கி வந்தது.
இக்கட்டடம் மிகவும் பழுதடைந்து, மழைக்காலத்தில் அலுவலகத்திற்குள் நீர்க்கசிவு ஏற்பட்டது. இதனால், சேதமான கட்டடத்திற்கு பதிலாக, புதிய கட்டடம் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, பழையசீவரத்தில் புதியதாக ஊராட்சி அலுவலகம் கட்ட கனிமவள நிதி மற்றும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகள், சில மாதங்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது.