/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரு நிழற்குடை திறப்பு பஸ் பயணியர் மகிழ்ச்சி
/
இரு நிழற்குடை திறப்பு பஸ் பயணியர் மகிழ்ச்சி
ADDED : ஜன 21, 2025 01:01 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம் எடமச்சி மற்றும் சாலவாக்கம் ஆகிய கிராமங்களில், 2024 -- 25ம் நிதியாண்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 12.72 லட்சம் ரூபாய் செலவில், இருபயணியர் நிழற்குடைகள் கட்டப்பட்டன.
இந்த நிழற்குடையை பயணியர் பயன்பாட்டிற்காக, உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து, எடமச்சி கிராமத்தில், 2024 -- 25ம் நிதியாண்டில், அயோத்தியதாச பண்டிதர் குடியிருப்பு திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. எடமச்சி ஊராட்சி தலைவர் தர்மராஜ், தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

