sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நவரை பருவ பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

/

நவரை பருவ பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

நவரை பருவ பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

நவரை பருவ பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஜன 12, 2025 12:50 AM

Google News

ADDED : ஜன 12, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

'அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்.,' என்ற நிறுவனத்தின் வாயிலாக, பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நவரை பருவத்தில், சாகுபடி செய்யப்படும் 1 ஏக்கர் நெற்பயிருக்கு, 518 ரூபாய் வழங்கப்படுகிறது.

நிலக்கடலைக்கு, 482 ரூபாய் பிரீமியம் தொகையாக, வரும் 31ம் தேதி வரை செலுத்தலாம். அதேபோல், 1 ஏக்கர் கரும்பு பயிரிடும் விவசாயிகள், 1,160 ரூபாய் பிரீமியம் கட்டணமாக, மார்ச்- 31க்குள் காப்பீடு செய்யலாம்.

எனவே, அந்தந்த கிராமங்களில் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

குறிப்பாக, பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், கணினி, சிட்டா, வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, பயிர் காப்பீடு தொகை செலுத்தி, ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us