/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி ஏமாற்றிய காவலர் மீது வழக்கு
/
6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி ஏமாற்றிய காவலர் மீது வழக்கு
6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி ஏமாற்றிய காவலர் மீது வழக்கு
6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி ஏமாற்றிய காவலர் மீது வழக்கு
ADDED : ஜன 22, 2025 07:12 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா, 32. இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா கரந்தை கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கும் இடையே, எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. கரந்தை கிராமத்தில் தனது கணவர், 2 மகள்களுடன் அமுதா வசித்து வந்தார். இந்நிலையில், கணவர் விமல்ராஜ், 2018 ல் இறந்து விட்டார்.
இதை தொடர்ந்து, உளுந்துார்பேட்டையில், 10 வது பட்டாலியனில், இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வரும் நீலகண்டன் என்பவருடன் அமுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் 6 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில், வேறு பெண்ணை திருமணம் செய்து தன்னை ஏமாற்றியதாக அமுதா, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
வழக்குப்பதிவு செய்ய, அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கடந்த டிசம்பரில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இரு நாட்கள் முன் இரு பிரிவுகளின் கீழ், நீலகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையில் அமுதா கூறியிருப்பதாவது :
எனது கணவர் விமல்ராஜூடன் கரந்தை கிராமத்தில் வசித்து வந்தேன். இரண்டு மகள்கள் உள்ளனர். கணவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்தது. அவருடன் வீட்டிற்கு வந்து சென்ற நீலகண்டன் என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்தார். இந்நிலையில், மஞ்சள்காமாலை காரணமாக, கடந்த 2018 ல் எனது கணவர் இறந்தார்.
கணவர் இறந்த பின், கணவரின் நண்பர் நீலகண்டன், எனது கழுத்தில் தாலி கட்டினார். இதை யாரிடமும் இப்போது சொல்ல வேண்டாம் என்றார். தொடர்ந்து, எனது வீட்டிற்கு வந்து தங்கி வந்தார். தொடர்ந்து ஊர் அறிய ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டினார்.
என்னுடன் தனிக்குடித்தனம் செய்து வந்த நிலையில், வேறு ஒரு பெண்ணை நீலகண்டன் திருமணம் செய்து கொண்டார்.
இதுபற்றி கேட்க, தற்போது திருவல்லிக்கேணியில் உள்ள போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பில் காவலராக பணியாற்றி வரும் நீலகண்டனிடம் சந்திக்க சென்றபோது, 'இங்கெல்லாம் வரக்கூடாது. தொலைத்து கட்டி விடுவேன்' என, மிரட்டினார். இதனால், தற்கொலைக்கு முயன்றேன். ஆறு ஆண்டுகளாக என்னுடன் தனிக்குடித்தனம் நடத்தி ஏமாற்றிய நீலகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***