sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாலாஜாபாத் தெருக்களில் கால்நடைகளால் தொந்தரவு

/

வாலாஜாபாத் தெருக்களில் கால்நடைகளால் தொந்தரவு

வாலாஜாபாத் தெருக்களில் கால்நடைகளால் தொந்தரவு

வாலாஜாபாத் தெருக்களில் கால்நடைகளால் தொந்தரவு


ADDED : ஆக 28, 2025 01:55 AM

Google News

ADDED : ஆக 28, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி தெருக்கள் இரவு நேரங்களில் கால்நடைகள் உறைவிடமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இத்தெருக்களில் வசிப்போர் பலரும் கால்நடைகளை பராமரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனினும், இரவு நேரத்தில் தங்களது கால்நடைகளை கொட்டகையில் அடைக்காமல் தெருக்களில் விடுவதை பலரும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.

இதனால், கூட்டமாக தெருக்களில் படுத்து ஓய்வெடுக்கும் கால்நடைகளால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். வாகனங்கள் வரும்போது, தெருக்களில் கால்நடைகள் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்திற்குள்ளாகும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் ஏராளமானோர், வாலாஜாபாதில் தங்கி சுற்று வட்டார தனியார் தொழிற்சாலைகளில் பணி செய்கின்றனர்.

இத்தொழிலாளர்கள், பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது, கால்நடைகள் முட்ட வருவதாலும், தெருவில் வழியின்றி படுத்துள்ளதாலும் தினமும் அவதிபடுகின்றனர்.

எனவே, வாலாஜாபாதில் இரவு நேரங்களில் கால்நடைகளை தெருக்களில் விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us