/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் குழாய் அமைக்காததால் வீணாகும் கால்நடை தொட்டி
/
குடிநீர் குழாய் அமைக்காததால் வீணாகும் கால்நடை தொட்டி
குடிநீர் குழாய் அமைக்காததால் வீணாகும் கால்நடை தொட்டி
குடிநீர் குழாய் அமைக்காததால் வீணாகும் கால்நடை தொட்டி
ADDED : மே 02, 2025 12:57 AM

பெரியநத்தம்:காலுார் ஊராட்சி, பெரியநத்தம் கிராமத்தில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், 2018 - 19ல், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டிகட்டப்பட்டது.
இருப்பினும் கால்நடை தொட்டியில் தண்ணீர் நிரப்ப குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், மேய்ச்சலுக்கு சென்று வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தாகம் தீர்க்க முடியாமல், குடிநீர் தொட்டி வீணாகி வருகிறது.
எனவே, கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், கால்நடை தொட்டிக்கு குடிநீர் குழாய் ஏற்படுத்த, காலுார் ஊராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பெரியநத்தம் கால்நடை விவசாயிகள் வலியுறுத்திஉள்ளனர்.

