sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கூத்திரமேடு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஆபத்தை உணராமல் குதித்து விளையாடும் சிறுவர்கள்

/

கூத்திரமேடு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஆபத்தை உணராமல் குதித்து விளையாடும் சிறுவர்கள்

கூத்திரமேடு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஆபத்தை உணராமல் குதித்து விளையாடும் சிறுவர்கள்

கூத்திரமேடு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஆபத்தை உணராமல் குதித்து விளையாடும் சிறுவர்கள்


ADDED : நவ 09, 2025 02:55 AM

Google News

ADDED : நவ 09, 2025 02:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூத்திரமேடு: காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கூத்திரமேடு சிறுபாலத்தில் இருந்து, ஆற்றில் குதித்து விளையாடும் சிறுவர்கள் ஆபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த கிளார் பகுதியில், பாலாற்றில் இருந்து பிரியும், வேகவதி ஆறு, முசரவாக்கம், மேல்ஒட்டிவாக்கம், கீழ்கதிர்பூர், காஞ்சிபுரம் வழியாக சென்று திம்மராஜம்பேட்டை பகுதியில் பாலாற்றில் இணைகிறது.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கூத்திரமேடு வழியாக செல்லும் வேகவதி ஆற்றில் ஆபத்தை உணராமல் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், கூத்திரமேடு சிறுபாலத்தில் இருந்து வெள்ளநீர் செல்லும் வேகவதி ஆற்றில் ஆபத்தான முறையில் குதித்து விளையாடுகின்றனர்.

திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், ஆற்றில் குளிக்கும் சிறுவர்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்படும் அபாயம் உள்ளது.

எனவே, கூத்திரமேடு வேகவதி ஆறு சிறுபாலம் அருகில் குளிப்பதற்கு தடை விதித்து, எச்சரிக்கை பலகையுடன், வேகவதி ஆற்றங்கரையோரம் தடுப்பு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூத்திரமேடு கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us