/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கன்னியம்மன் கோவிலில் வரும் 30ல் சித்திரை திருவிழா
/
கன்னியம்மன் கோவிலில் வரும் 30ல் சித்திரை திருவிழா
ADDED : ஏப் 27, 2025 06:28 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர், எம்.ஜி.ஆர் நகரில், கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா, நாளைமறுதினம், நடக்க உள்ளது.
அதில், காலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு நெய், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு, முத்துபிள்ளையார் கோவிலில் இருந்து, பெண்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்துவரும் நிகழ்வு நடக்க உள்ளது.
பின், காலை 11:00 அம்மனுக்கு கூழ்வார்த்தல் நடக்கிறது. இதையடுத்து, மாலை 6:00 மணிக்கு, அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடக்க உள்ளது.