sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள்

/

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள்

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள்

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள்


ADDED : செப் 30, 2024 06:48 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மாநகராட்சி ஊழியர்கள் 100 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 300க்கும் மேற்பட்டோர், துப்புரவு பணியாளர்களாக உள்ளனர்.

இவர்கள், காலை, இரவு என இரு ஷிப்டுகளில், மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாதந்தோறும் சரிவர சம்பளம் வழங்கவில்லை என ஏற்கனவே போராட்டம், மறியல் போன்றவை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் மாநகராட்சி நிர்வாகம் வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது. இரவு நேரத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஒளி எதிரொலிக்கும் ஜாக்கெட்டுகள், கையுறைகள் ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

அதேபோல, பேருந்து, கனரக வாகனங்கள் செல்லும் சாலையில் பணியாற்றும்போது, எச்சரிக்கை தடுப்புகள், அறிவிப்புகள் காட்டும் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.

ஆனால், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி துப்புரவு பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். எச்சரிக்கை அறிவிப்புகள் இன்றி பணியாற்றும்போது, இவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

டெல்லியிலிருந்து துப்புரவு பணியாளர்களுக்கான வாரியத்திலிருந்து தலைவர், அதிகாரிகள் வரும்போது மட்டும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. மற்ற சமயங்களில் எந்தவித பாதுகாப்பும் இன்றி பணியாற்றுவதாக துப்புரவு பணியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us