sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அடிக்கடி பழுதாகும் கணினி தடுமாறும் கலெக்டர் 'ஆபீஸ்'

/

அடிக்கடி பழுதாகும் கணினி தடுமாறும் கலெக்டர் 'ஆபீஸ்'

அடிக்கடி பழுதாகும் கணினி தடுமாறும் கலெக்டர் 'ஆபீஸ்'

அடிக்கடி பழுதாகும் கணினி தடுமாறும் கலெக்டர் 'ஆபீஸ்'


ADDED : செப் 24, 2024 04:46 AM

Google News

ADDED : செப் 24, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : அரசு அலுவலகங்களில் காகித கோப்புகளை குறைக்க, தமிழக அரசு 'இ- - ஆபிஸ்' திட்டத்தை கொண்டு வந்துள்ளது. காகித கோப்புகளை குறைத்து, கணினி வாயிலாகவே கோப்புகளை கையாள வேண்டும் என்றும், அனைத்து கோப்புகளும் டிஜிட்டலாக மாற, இத்திட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்திவருகிறது.

இதற்கான அடிப்படை தேவையாக கணினி பயன்பாடு உள்ளது. ஆனால், பல்வேறு அரசு அலுவலகங்களில் கணினி பயன்பாடு, பராமரிப்பு மோசமாக உள்ளது.

குறிப்பாக, காஞ்சிபுரம்கலெக்டர் அலுவலகத்தில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கணினிகளுக்கு, யு.பி.எஸ்., எனப்படும் பேட்டரி வசதிகள் இல்லாமல்உள்ளது.

இதனால், மின் தடை நேரத்தில், கணினிகள் திடீரென நிறுத்தப்படுவதும், அவை அடிக்கடி பழுதாவதும் தொடர்கிறது.

இந்நிலையில், வருவாய் துறையிலிருந்து காஞ்சிபுரம் கலெக்டர்அலுவலகத்திற்கு,புதிதாக 40 கணினிகள்வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை பத்திரமாக பயன்படுத்தவும், பராமரிக்கவும் தேவையான பேட்டரி வசதிகள், கலெக்டர் அலுவலகத்தில் இல்லை என, அரசு ஊழியர்கள் புலம்புகின்றனர். ஏற்கனவே உள்ள ஜெனரேட்டர் வசதி, கலெக்டர் அலுவலக அறைக்கும், டி.ஆர்.ஓ., அலுவலக அறைக்கும் மட்டுமே உள்ளது.

கலெக்டர் அலுவலகம் முழுமைக்கும் பேட்டரி வசதி இல்லை.

மின் தடை நேரத்தில் கணினிகளை பயன்படுத்த தேவையான பேட்டரி வசதிகள் இல்லாதது பெரும் குறையாகவே உள்ளதாக, அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

மின் தடை ஏற்படும் போதெல்லாம், கணினிகள் செயல்பாடு திடீரென நின்றால், புதிய கணினிகளும் விரைவாக பழுது ஏற்படும் என்கின்றனர்.

மாவட்டத்தின் தலைமை அரசு அலுவலகத்தில், இதுவரை பேட்டரி வசதி அமைக்க நடவடிக்கை இல்லை. கோடிக்கணக்கில் செலவிட்டு, கலெக்டர் அலுவலகம் முழுதும் அழகு படுத்தும் பணிகள் கடந்தாண்டு நடந்தன.

அப்போதும், பேட்டரி வசதிகள் செய்யவில்லை. பல்வேறு வகையான நிதி, மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளபோதும் , கலெக்டர் அலுவலகத்திற்கு பேட்டரி வசதி இல்லை.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பல கணினிகள் பற்றி பதிவேடுகள் இல்லை எனக்கூறப்படும் நிலையில், புதிதாக கொடுக்கப்பட்டுள்ள கணினிகளுக்கு பதிவேடுகள் பராமரிப்பர்என எதிர்பார்க்கப் படுகிறது.






      Dinamalar
      Follow us