/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் அறிவிப்பு
/
வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் அறிவிப்பு
ADDED : ஆக 19, 2025 10:27 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை மறுதினம், வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு:
காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை மறுதினம் காலை 9:30 மணிக்கு, வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தனியார் நிறுவனங்கள் வாயிலாக, 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடக்கிறது. பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
எனவே, 18 - 35 வயது வரை உள்ளவர்கள், தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
மேலும், விபரங்களுக்கு 044 -2723 7124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.