/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விஜயராகவ பெருமாள் கோவிலில் மார்ச் 4ல் பிரம்மோற்சவம் துவக்கம்
/
விஜயராகவ பெருமாள் கோவிலில் மார்ச் 4ல் பிரம்மோற்சவம் துவக்கம்
விஜயராகவ பெருமாள் கோவிலில் மார்ச் 4ல் பிரம்மோற்சவம் துவக்கம்
விஜயராகவ பெருமாள் கோவிலில் மார்ச் 4ல் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED : பிப் 24, 2024 12:32 AM
திருப்புட்குழி:காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழியில், ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றான மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம், மார்ச் 4ம் தேதி காலை 6:50 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
உற்சவத்தையொட்டி, தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். இதில், ஏழாம் நாள் பிரபல உற்சவமான தேரோட்டம் மார்ச் 10ல் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர்லஷ்மிகாந்த பாரதிதாசன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.