/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழா துவக்கம்
/
கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழா துவக்கம்
ADDED : நவ 18, 2024 01:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், வாரந்தோறும் பக்தர்கள் மாவிளக்கு பரிகாரம் செய்யும், கடை ஞாயிறு பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, கடை ஞாயிறு விழா துவங்கியது. இதில், சிறுவர்கள், பெரியவர்கள் என, திரளான பக்தர்கள் மண்சட்டியில், பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து, அதில் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தலையில் மாவிளக்கு சுமந்தபடி கோவிலில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.