/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாலுகா அலுவலக கூரையில் கான்கிரீட் பெயர்ந்து வரும் அவலம்
/
தாலுகா அலுவலக கூரையில் கான்கிரீட் பெயர்ந்து வரும் அவலம்
தாலுகா அலுவலக கூரையில் கான்கிரீட் பெயர்ந்து வரும் அவலம்
தாலுகா அலுவலக கூரையில் கான்கிரீட் பெயர்ந்து வரும் அவலம்
ADDED : ஏப் 20, 2025 12:41 AM

-உத்திரமேரூர், உத்திரமேரூரில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு, 73 கிராமங்களைச் சேர்ந்தோர் சான்றிதழ் பெறவும், கோரிக்கை மனுக்கள் அளிக்கவும் தினமும் வந்து செல்கின்றனர்.
மேலும், உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்திற்கு, கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோரும், பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தாலுகா அலுவலக கட்டடம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும், கட்டட கூரை சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து விழுந்து வருகிறது.
இதனால், தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். பழுதடைந்து வரும் தாலுகா அலுவலக கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.