sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வெள்ளம் சூழும் இடத்தில் தரைதளம் கட்டுவதற்கு தடை விதிக்க பரிசீலனை

/

வெள்ளம் சூழும் இடத்தில் தரைதளம் கட்டுவதற்கு தடை விதிக்க பரிசீலனை

வெள்ளம் சூழும் இடத்தில் தரைதளம் கட்டுவதற்கு தடை விதிக்க பரிசீலனை

வெள்ளம் சூழும் இடத்தில் தரைதளம் கட்டுவதற்கு தடை விதிக்க பரிசீலனை


ADDED : பிப் 21, 2024 11:17 PM

Google News

ADDED : பிப் 21, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் தரைதள வீடுகள் கட்டுவதை தவிர்க்கும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை பரிசீலித்து வருகிறது.

மாநிலத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நீர் வழித்தடங்கள், நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் மக்கள் குடியேறுவது அதிகரித்துள்ளது.

இதனால், இப்பகுதிகளில் குடியிருப்பு திட்டங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், மழைக்காலத்தில் நீர் வழித்தடங்கள், நீர் நிலைகள் நிரம்பும் போது, குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்படுகின்றன. அப்பகுதிகளில் ஆண்டில் சில மாதங்கள், மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த பின்னணியில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், சமீபத்திய ஆண்டுகளில் வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த இடங்களில், எவ்வளவு உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்தது என்ற விபரம், பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அளவிடப்பட்டது.

அந்தந்த பகுதிகளிலுள்ள கட்டடங்களில் இதற்கான குறியீடு வரையப்பட்டதுடன், திட்ட அனுமதி அளிக்கும் துறைகளுக்கும் இந்த விபரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

நடவடிக்கை


இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்காத வகையில், கட்டடங்களின் தரைமட்ட உயரத்தை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில் கட்டட அனுமதிக்கான விதிகளில், தேவையான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. வெள்ளம் வரும் போது, அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைதள வீடுகளில் வசிப்போர் தான், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில், தரைதள வீடுகள் கட்டுவதை தவிர்க்கும் வகையில், உரிய கட்டுப்பாடுகளை பிறப்பிக்க பரிசீலித்து வருகிறோம்.

இதனால், வெள்ளத்தால் வீடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us