/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மயங்கி விழுந்த கட்டட தொழிலாளி பலி
/
மயங்கி விழுந்த கட்டட தொழிலாளி பலி
ADDED : மே 30, 2025 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் நேதாஜி நகரைச்சேர்ந்த ஏழுமலை, 51, கொத்தனார். இவர் நேற்று முன்தினம் பகல் 2:00 மணி அளவில் சேக்குப்பேட்டை நடுத்தெருவில் வேலை செய்துக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, விஷ்ணுகாஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.