sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின்மாற்றி அமைக்க கோரி கவுன்சிலர் மனு

/

மின்மாற்றி அமைக்க கோரி கவுன்சிலர் மனு

மின்மாற்றி அமைக்க கோரி கவுன்சிலர் மனு

மின்மாற்றி அமைக்க கோரி கவுன்சிலர் மனு


ADDED : செப் 22, 2024 03:01 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், காஞ்சிபுரம் வடக்கு கோட்டத்திற்கான மின் நுகர்வோர் கூட்டம் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டு கவுன்சிலர் புனிதா சம்பத் அளித்த கோரிக்கை மனு விபரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டில் குறைந்த மின்னழுத்த பிரச்னை காரணமாக, கடந்த ஜன., மாதம் 10ம் தேதி நடந்த கூட்டத்தில் மனு அளித்தும், தற்போது வரை மின்மாற்றி அமைக்கவில்லை. மாகாளியம்மன் கோவில் தெருவில் பூர்வாங்க பணிகள் செய்தும் மின்மாற்றி அமைக்கவில்லை.

மேலும், லாலா குட்டை தெருவில் மின்மாற்றி அமைக்க கோரிக்கை மனு அளித்திருந்தேன். அதன் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள், லாலா குட்டை தெருவில் புதிய மின்மாற்றி அமைப்பதோடு, பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

வரதராஜபுரம் தெருவில் கால்வாய் அருகில் உள்ள இரும்பு கம்பத்தை மாற்ற வேண்டும். மாகாளியம்மன் கோவில் தெருவில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us