sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பைக் மீது கார் மோதல்: தம்பதி உயிரிழப்பு

/

பைக் மீது கார் மோதல்: தம்பதி உயிரிழப்பு

பைக் மீது கார் மோதல்: தம்பதி உயிரிழப்பு

பைக் மீது கார் மோதல்: தம்பதி உயிரிழப்பு


ADDED : ஜூலை 14, 2025 11:53 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்ஒரகடம் அருகே, சாலையை கடக்க முயன்ற பைக் மீது, கார் மோதியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.

ஒரகடம் அருகே, வேண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன், 46. ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, 'ஹோண்டா டியோ' பைக்கில் மனைவி அஞ்சலை, 44, உடன், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வரணவாசி சென்று, மீண்டும் இருவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, பண்ருட்டி சந்திப்பில் வேண்பாக்கம் கிராமத்திற்கு செல்ல திரும்பிய போது, அதே திசையில் பின்னால் அதிவேகமாக வந்த கார், நாகப்பன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தம்பதி இருவரும் உயிரிழந்தனர்.

ஒரகடம் போலீசார் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us