sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையை மறித்து நிற்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

/

சாலையை மறித்து நிற்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

சாலையை மறித்து நிற்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

சாலையை மறித்து நிற்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்


ADDED : ஜன 23, 2025 01:00 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, பாலுார் -- காஞ்சிபுரம் உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக,வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை உள்ளது.

இச்சாலை வழியாகஒரடகம், வல்லம்,ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்தொழிற் சாலைகளுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

எப்போதும் போக்கு வரத்து அதிகமுள்ளஇச்சாலையில், காரணித்தாங்கல், செரப்பனஞ்சேரி, பனப்பாக்கம், வஞ்சுவாஞ்சேரி, ஆரம்பாக்கம், சாலமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மாடுகளை வைத்திருப்போர், மாடுகளை கொட்ட கையில் வைத்து பராமரிக்காமல் சாலையில் விடுகின்றனர். அவை, கூட்டம் கூட்டமாக சாலையில் வலம் வருவதோடு, சாலை நடுவே படுத்து ஓய்வெடுக்கிறது.

மேலும், அவை திடீரென சாலையின் குறுக்கும் நெடுக்கமாக ஓடுவதால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள், திடீரென சாலையின் குறுக்கே வரும் மாட்டின் மீது மோதி, கீழே விழுந்து காயமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, குன்றத்துார் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us