sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

/

சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்


ADDED : ஜன 03, 2025 01:50 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம்-வாலாஜாபாத்-படப்பை சாலையில், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, வாலாஜாபாத் ஒன்றியத்தைச்சேர்ந்த, 61 ஊராட்சிகளைச்சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் அரசு சிமென்ட் எடுக்கவும், கம்பி பெற்று செல்லவும் வருகின்றனர். இது தவிர, வாலாஜாபாத், மாகரல், தென்னேரி ஆகிய குறு வட்டங்களை சேர்ந்த கிராம மக்கள் வருவாய் சான்றுகள் பெற தாலுகா அலுவலகத்திற்கு வருகின்றனர்.

வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் படுத்து ஓய்வு எடுக்கிறது. இதனால், தாலுகா அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிமென்ட், கம்பி எடுக்க வாகனங்களில் செல்வோருக்கு இடையூறாக உள்ளன.

குறிப்பாக, வாலாஜாபாதில் இருந்து படப்பை செல்வோர் மாடுகளின் மீது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

எனவே, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம், திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us