sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

 சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : டிச 08, 2025 06:11 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு பிரதான சாலையில், போக்கு வரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, தொழுவத்தில் ஒப்படைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு மஞ்சள்நீர் கால்வாய் சிறுபாலம் வழியாக சின்ன காஞ்சிபுரம், பேருந்து நிலையம், ரயில்வே சாலை, மின் நகர், மாமல்லன் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், திருக் காலிமேடு சுற்றியுள்ள பகுதியில் மாடு வளர்ப்போர், அவற்றை தங்கள் வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல் மேய்ச்சலுக்காக வெளியே அவிழ்த்து விடுகின்றனர்.

மேய்ச்சலுக்காக செல்லும் மாடுகள், திருக்காலிமேடு மஞ்சள்நீர் கால்வாய் சிறுபாலம் அருகில், சாலையை மறித்து நிற்பதோடு, குறுக்கும் நெடுக்குமாக மிரண்டு ஓடுவதால், பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, திருக்காலிமேடு பிரதான சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து தொழுவத்தில் ஒப்படைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us