/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த நிழற்குடை கூரை காவாம்பயிரில் பயணியர் அவதி
/
சேதமடைந்த நிழற்குடை கூரை காவாம்பயிரில் பயணியர் அவதி
சேதமடைந்த நிழற்குடை கூரை காவாம்பயிரில் பயணியர் அவதி
சேதமடைந்த நிழற்குடை கூரை காவாம்பயிரில் பயணியர் அவதி
ADDED : ஏப் 08, 2025 12:47 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், காவாம்பயிர் கிராமத்தில், திருமுக்கூடல் செல்லும் சாலையில், பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த பயணியர் நிழற்குடை, 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இங்கு, திருமுக்கூடல், வெங்கச்சேரி, வயலக்காவூர், நெய்யாடுபாக்கம் செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன. தற்போது, பயணியர் நிழற்குடை முறையாக பராமரிப்பு இல்லாமல், கூரை சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து உள்ளது.
இதனால், நிழற்குடை உள்ளே சென்று அமர்வதை பயணியர் தவிர்த்து வருகின்றனர். எனவே, சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.